#

#

Wednesday, November 16, 2016

திருநின்றவூரில் மணல் கடத்தல் - டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி ; கூட்டாளிகளுக்கு வலை -

ஆவடி, -ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் கூவம் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் இரவு நேரங்களில் அடிக்கடி மணல் திருட்டு நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் திருநின்றவூர், கொசவன்பாளையம், பொன்னியம்மன்மேடு, எம்ஜிஆர் தெருவை சேர்ந்த தமிழ்வாணன் (எ) யேசு (37) என்பவர் டிராக்டரில் மணல் அள்ளுவதற்கு சென்றுள்ளார்.பின்னர் அவரும் கூட்டாளிகளும் சேர்ந்து கூவம் ஆற்றில் மணல் அள்ளி டிராக்டரில் நிரப்பிக் கொண்டனர். பின்னர் மணலுடன் டிராக்டரை எடுத்துக்கொண்டு கூவம் ஆற்றிலிருந்து வெளியே வந்தனர்.அப்போது...

விளிஞ்சியம்பாக்கம் ஏரி உபரிநீர் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம்

ஆவடி: ஆவடி பகுதியில் விளிஞ்சியம்பாக்கம் ஏரி மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மழைக் காலத்தில் இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், கால்வாய் வழியாக பருத்திப்பட்டு ஏரியில் சென்றடையும். இந்த கால்வாய் கருமாரி அம்மன் கோயில் பிரதான சாலை, காமராஜர் நகர் மெயின் ரோடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சலவையாளர் குடியிருப்பு வழியாக சுமார் 3 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது.ஆரம்ப காலத்தில் 25 அடி அகலத்தில் இருந்த இந்த உபரிநீர் கால்வாய், முறையான பராமரிப்பில்லாததால் தற்போது பெரும்பகுதி ஆக்கிரமிப்பின்...

ஆவடி: சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வராத புதிய டிக்கெட் கவுன்டர் : டிக்கெட் வாங்குவதற்கு தண்டவாளத்தை கடப்பதால் விபத்தில் சிக்கும் பயணிகள்

ஆவடி: சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் ரயில் நிலையம் உள்ளது. சுற்றுப் பகுதிகளான தண்டுரை, காமராஜர்புரம், சோழன் நகர், சார்லஸ் நகர், பாபு நகர், உழைப்பாளர் நகர், கக்கன்ஜி நகர், வள்ளலார் நகர், கோபாலபுரம், வெங்கடாபுரம், கருணாகரச்சேரி, சோராஞ்சேரி, அன்னம்பேடு, அமுதூர்மேடு, சித்துக்காடு, வயலாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.  பட்டாபிராம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் மற்றும் சென்னை நகர்களுக்கு தனியார் மற்றும் அரசு ஊழியர்கள்,...

ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து விபத்து

ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில், இரண்டு பஸ்களுக்கும் நடுவில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ் பயணிகள் 10 பேர் காயம் அடைந்தனர். அரசு பஸ்கள் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று மதியம் ஆவடி நோக்கி சென்று கொண்டு இருந்தது. அதற்கு பின்னால் காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் வந்து கொண்டு இருந்தது. அரசு பஸ்கள் இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக செல்ல, 2...

ஆவடியில் அண்ணன்-தங்கை தூக்குப்போட்டு தற்கொலை

ஆவடி,ஆவடியில் அண்ணன்-தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.திருமண ஏற்பாடுசென்னை உள்ளகரம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மகன் சரவணன் (வயது 31). பட்டப்படிப்பு முடித்து விட்டு நங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.சரவணனுக்கு அவருடைய பெற்றோர் திருவேற்காட்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்தனர். இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என சரவணன் கூறியுள்ளார். இது பற்றி பெண் வீட்டாரிடம் சரவணனின் பெற்றோர் தெரிவித்தனர். திருமணத்துக்கான ஏற்பாடுகளை...

ஆவடியில் பணாத்தை மாற்றுவதற்காக வரிசையில் நிற்கும் மக்கள்

திருவள்ளுர் மாவட்டம், ஆவடியில் உள்ள இந்தியன் வங்கியில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை மாற்றுவதற்காக பொதுமக்கள் இன்று காலை குவிந்தனர். வங்கி கொடுக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையில் ரொக்கமாக 4 ஆயிரம் பெற்றுச் சென்றனர்.  இதேபோல் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் காத்திருந்து தங்களது ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை மாற்றி சென்றுள்ளனர்...

ஆவடி அருகே வியாபாரி வீட்டில் 10 சவரன் கொள்ளை

ஆவடி, -ஆவடியை அடுத்த அயப்பாக்கம், அபர்ணா நகர், காவேரி தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து (35). அதே பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி திருப்பதி (28) மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.கடந்த 2 நாட்களுக்கு முன் பேச்சிமுத்து தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றுவிட்டார். இதன்பிறகு வீட்டில் தனியாக இருப்பதற்கு பயந்து, திருப்பதி தனது 2 குழந்தைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு, அருகிலுள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டார்.பேச்சிமுத்துவின் வீட்டில் அவரது கடையில் வேலை செய்யும் ஊழியர் பாலுசாமி பாதுகாப்புக்கு...

பள்ளி கட்டிடத்தின் 2வது தளத்தில் திடீர் அதிர்வு..! 4 மணி நேரம் பரபரப்பு..!!

சென்னையை அடுத்த, ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனியாருக்கு சொந்தமான பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 700 மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர். இந்நிலையில், பள்ளி கட்டிடத்தின் 2வது தளத்தில் திடீரென அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவியர் உடனே வகுப்பறையை விட்டு வெளியே வந்து வளாகத்தில் குவிந்தனர். இதனைத்தொடர்ந்து, பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரிவித்த பள்ளி நிர்வாகம் அனைத்து மாணவர்களையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. மறுநாள் மாணவர்கள் பள்ளிக்கு...

திமுக கவுன்சிலரின் தந்தை வெட்டிக்கொலை.. ஆவடியில் பதற்றம்

திருவள்ளுர்: ஆவடி நகராட்சி திமுக கவுன்சிலரின் தந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் ஆவடி நகராட்சி 3வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தவர் சிங்காரம். இவரின் தந்தை வீரராகவன்(65) இன்று மாலை ஆவடி டேங்க் பேக்டரி அருகில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்த வீரராகவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்துக்கு...

ஆவடி ராணுவ மைதானத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.1 கோடி.. வாக்கிங் சென்றவர்களுக்கு ஜாக்பாட்

சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் சுமார் 1 கோடி ரூபாய் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆவடியில் உள்ள ராணுவத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று, காலை குவியல் குவியலாக கொட்டப்பட்டிருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை வாக்கிங் சென்றவர்கள் பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்தனர். தங்களால் முடிந்த பணத்தை அள்ளிக்கொண்டு 'அப்பீட்' ஆகினர். தகவல் பரவியதும் அருகேயுள்ள, வெங்கடேசபுரம், அம்பேத்கர் நகர், உழைப்பாளர் நகர், கரிமேடு, முத்தாபுதுப்பேட்டை பகுதிகளை சேர்ந்த...

Site Search