#

#

Wednesday, November 16, 2016

ஆவடி அருகே வியாபாரி வீட்டில் 10 சவரன் கொள்ளை




ஆவடி, -ஆவடியை அடுத்த அயப்பாக்கம், அபர்ணா நகர், காவேரி தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து (35). அதே பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி திருப்பதி (28) மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.கடந்த 2 நாட்களுக்கு முன் பேச்சிமுத்து தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றுவிட்டார். இதன்பிறகு வீட்டில் தனியாக இருப்பதற்கு பயந்து, திருப்பதி தனது 2 குழந்தைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு, அருகிலுள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பேச்சிமுத்துவின் வீட்டில் அவரது கடையில் வேலை செய்யும் ஊழியர் பாலுசாமி பாதுகாப்புக்கு தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று காலை பாலுசாமி வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றார். பின்னர் நேற்றிரவு பேச்சிமுத்துவின் வீட்டுக்கு பாலுசாமி திரும்பினார்.அப்போது பேச்சிமுத்து வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து பேச்சிமுத்துவின் மனைவி திருப்பதிக்கு தகவல் கொடுத்தார். அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பீரோவை பார்த்தபோது, அதில் இருந்த 10 சவரன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இது குறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் திருப்பதி புகார் செய்தார். இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார். - See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=99794#sthash.NXM2X9u1.dpuf

0 comments:

Post a Comment

Site Search