ஆவடி, -ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் கூவம் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் இரவு நேரங்களில் அடிக்கடி மணல் திருட்டு நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் திருநின்றவூர், கொசவன்பாளையம், பொன்னியம்மன்மேடு, எம்ஜிஆர் தெருவை சேர்ந்த தமிழ்வாணன் (எ) யேசு (37) என்பவர் டிராக்டரில் மணல் அள்ளுவதற்கு சென்றுள்ளார்.பின்னர் அவரும் கூட்டாளிகளும் சேர்ந்து கூவம் ஆற்றில் மணல் அள்ளி டிராக்டரில் நிரப்பிக் கொண்டனர்.
பின்னர் மணலுடன் டிராக்டரை எடுத்துக்கொண்டு கூவம் ஆற்றிலிருந்து வெளியே வந்தனர்.அப்போது அவரது டிராக்டர் நிலைதடுமாறி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டர் உரிமையாளர் தமிழ்வாணன் டிராக்டரின் இன்ஜினுக்கு அடியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவலறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.அங்கு டிராக்டருக்கு அடியில் சிக்கியிருந்த தமிழ்வாணனின் சடலத்தை கைப்பற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
0 comments:
Post a Comment