#

#

Monday, October 24, 2016

ஆவடி அருகே மகனை கத்தியால் குத்திய தந்தை கைது




ஆவடியை அடுத்த கரலப்பாக்கம் அண்ணா சாலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 52). இவரது மகன் ஜம்புலிங்கம் (25) லாரி கிளீனராக வேலை பார்த்து வருகிறார். ஜம்புலிங்கம் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் குடும்பத்துக்கு கொடுக்காமல் வீண் செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தந்தைக்கும்–மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை கிருஷ்ணமூர்த்தி மகன் ஜம்புலிங்கத்திடம் வீண் செலவு செய்வதை கண்டித்துள்ளார்.
இதையடுத்து ஜம்புலிங்கம், தந்தை கிருஷ்ணமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, மகன் என்றும் பாராமல் கத்தியை எடுத்து ஜம்புலிங்கத்தின் முதுகில் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த ஜம்புலிங்கம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை நேற்று காலை கைது செய்தனர்.

0 comments:

Post a Comment

Site Search