#

#
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Tuesday, September 6, 2016

இந்தியா வரும் வெளிநாட்டுப் பெண்கள் குட்டை பாவாடை அணியகூடாது..




                  இந்தியா வரும் வெளிநாட்டு பெண்கள் குட்டை பாவாடை அணிய கூடாது என மத்திய சுற்றுழா மற்றும் கலாச்சாரதுரை அமைச்சர் மகேஷ் சர்மா பேசியுள்ளார்.இதன் மூலம் பல உண்மைகளை தன்னை அறியாமலேயே ஒப்புகொண்டுள்ளார்.
     
                         வெளிநாட்டு சுற்றுழாப் பயணிகளுக்கான 1363 ந்ன்ற உதவி எண் சேவையை அறிமுகம் செய்து வைத்த பிறகு மகேஷ் ஷர்மா செய்தியாள்ர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் வெளிநாட்டு சுற்றுழா பயணிகள் விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது அவர்களுக்கு வைக்கபடும் வரவேற்பு பதாகைகளிலேயே எவற்றை எல்லம் செய்யலாம் எவற்றை எல்லம் செய்யகூடாது என்ற கட்டுபாட்டை குறிப்பிடவேண்டும்.
                           குறிப்பாக அவர்கள் சிறிய நகரங்களுக்கு வந்தால் ,

 1.இரவில் தனியாக வெளியில் சுற்றி திறிய கூடாது.,
2.ஸ்கர்ட் போன்ற குட்டை பாவாடை களை அணியகூடாது.
                 
                          நமது நாட்டிற்கு வருபவர்களுக்கு  ஏன் ஆடை கட்டுபாடு விதிக்க கூடாது.என அவர் கேள்வி எழுப்பினார்.ஆபாச ஆடை அணியும் பெண்கள் ஆண்களின் வக்கிற பார்வைக்கு ஆளாகி அதன் காரணமாக பல அசம்பாவிதங்கள் நடக்கின்றன.இதை நாம் வறவேற்கிறோம் .
                             இது போல ஆபாச ஆடை அணியும் இந்திய பெண்களுக்கும் வக்கிர பார்வை பார்க்கும் ஆண்களால் ஏற்படுமல்லவா? அப்படியானால் அனைத்து பெண்களுக்கும் இந்த கட்டளை பொருந்துமே!
                                இதை உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல சட்டங்களை இயற்றினால் பெண்களின் மானம் காக்கபடும் .
                                பெண்கள் தமது உடலை  முழுமையாக மூடுவதற்கு ஊக்கபடுத்தவேண்டும் .




                                                                                     -----------நன்றி  உணர்வு-------------

8 லட்ச ரூபாய்க்கு சேலை எடுத்து அரசாங்க கணக்கில் சேர்த்த பா .ஜ.க பெண் அமைச்சர் புதிய ஊழல்


மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிதி இரானி, 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சேலைகளை வாங்கி கொண்டு அதற்கான தொகையை துறைரீதியான செலவுகளில் சேர்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது, தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த ஸ்மிதி இரானி தற்போது ஜவுளித்துறையை கவனித்து வருகிறார்.
அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதிலிருந்து அத்துறையின் செயலாளராக உள்ள ரேஷ்மி வர்மாவுடன் அவர் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ஜவுளித்துறைக்கு கீழ் இயங்கும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஸ்மிதி இரானி, சில லட்சம் ரூபாய் மிதிப்புள்ள சேலைகளையும், விநாயகர் சிலை ஒன்றையும் வாங்கியுள்ளார்.
இதற்கான பணத்தை கொடுக்காமல், ஜவுளித்துறையின் கணக்கில் இதனை சேர்க்கும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்த துறை செயலாளர் ரேஷ்மி, சொந்த செலவுகளுக்கு அரசு பணம் வழங்க முடியாது எனக் கூறி பணம் வழங்க மறுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக பிதரமர் அலுவலகத்திலும் ரேஷ்மி புகார் அளித்தாகவும் கூறப்படுகிறது. இந்த புகாரை முற்றிலுமாக மறுத்துள்ள ஸ்மிருதி, இதனை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள தனக்கு நெருங்கியவர்கள் மூலமாக ரேஷ்மியின் குற்றச்சாட்டு அடங்கிய கோப்புகளை அப்புறப்படுத்தவும் ஸ்மிதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி கோசாலையில் இறந்த 46 ஆயிரம் மாடுகள்: அதிர்சி தகவல்...

           
 
           டெல்லி மாநகராட்சி சார்பில் பசுக்கள் மற்றும் வயதான காளை மாடுகளை பராமரிக்க 5 கோசாலைகள் நடத்தபடுகின்றன.இந்த 5 கோசாலைகள் மூலம் 24 ஆயிரம் மாடுகளை பாதுகாக்க வசதி செய்யபட்டுள்ளது.
              தெற்கு டெல்லி மாநகராட்சியில் செயல்படும் கோசாலைக்கு கடந்த 2015-16 ஆம் ஆண்டில் 3,398 மாடுகள் பாதுகாப்பதற்கு அனுப்பி வைக்கபட்டன. இதே ஆண்டில் அந்த கோசாலையில் 3,185 மாடுகள் உயிரிழந்தன .அதற்கு முந்தைய 2014-215 ஆம் ஆண்டில் 2,974 மாடுகள்: இதில் 3,140 மாடுகள் இறந்து விட்டன .
              மேலும் கிழக்கு டெல்லி மாநகராட்சி கோசாலைக்கு சொந்தமான கோசாலைக்கு 2015 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 190 மாடுகள் அனுப்பபட்டன.இதில் 12 மாடுகள் இறந்துவிட்டன.
               இதில் கடந்த 2011 ம் ஆண்டில் டெல்லி கோசாலைக்கு அனுப்பபட்ட 49 ஆயிரம் மாடுகளில் 46 மாடுகள்  இறந்துவிட்டன.இது டெல்லி மாநகராட்சி தந்துள்ள புள்ளி விபரமாகும்.
                 இது போல் ராஜஸ்தான் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த 500 மாடுகள் சமீபத்தில் போதிய பராமரிப்பின்றி இறந்துள்ளன .இப்படி பசுவை பாதுகாப்பதற்காக அமைக்கபட்ட கோசாலைகளே பசுக்களின் மரண கூடங்களாக மாறி வரும் நிலையில் பசுவை பாதுகாப்பதாகச் சொல்லி  மனிதர்களை கொள்ளும் பசு நேசர்கள் –பசுக்களை பாதுகாப்தற்காக அரசு சார்பில் அமைக்கபட்ட கோசாலைகள் தோல்வி அடைந்து விட்டன .

           பசுவைவை பாதுகாப்பதாக என்று சொல்லி மனிதர்களை கொன்று குவிக்கிற நிகழ்வுகள் நம்முடைய இந்தியாவில்  பல இடங்களில் நடைபெற்றுகொண்டுவருகிறது. அப்படிபட்ட பசு நேசர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள் ?????????............

Site Search