ஆவடி,
ஆவடியில் அண்ணன்-தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
திருமண ஏற்பாடு
சென்னை உள்ளகரம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மகன் சரவணன் (வயது 31). பட்டப்படிப்பு முடித்து விட்டு நங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
சரவணனுக்கு அவருடைய பெற்றோர் திருவேற்காட்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்தனர். இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என சரவணன் கூறியுள்ளார். இது பற்றி பெண் வீட்டாரிடம் சரவணனின் பெற்றோர் தெரிவித்தனர். திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் பெண் வீட்டார் இதை ஏற்கவில்லை.
தூக்கில் தொங்கினர்
இதனால் மனமுடைந்த சரவணன் நேற்று ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் தன்னுடைய சித்தி வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடைய சித்தி வீட்டில் இல்லை. அவருடைய மகள் சரண்யா (23) மட்டும் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில் சரவணனும், சரண்யாவும் வீட்டில் ஒரே மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். நேற்று மாலை சரண்யாவின் தம்பி வீட்டுக்கு வந்த போது தன் அக்காளும், அண்ணன் சரவணனும் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
போலீஸ் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இருவரின் உடல்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன்-தங்கை தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment