#

#

Wednesday, November 16, 2016

ஆவடி ராணுவ மைதானத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.1 கோடி.. வாக்கிங் சென்றவர்களுக்கு ஜாக்பாட்

சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் சுமார் 1 கோடி ரூபாய் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆவடியில் உள்ள ராணுவத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று, காலை குவியல் குவியலாக கொட்டப்பட்டிருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை வாக்கிங் சென்றவர்கள் பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்தனர். தங்களால் முடிந்த பணத்தை அள்ளிக்கொண்டு 'அப்பீட்' ஆகினர். தகவல் பரவியதும் அருகேயுள்ள, வெங்கடேசபுரம், அம்பேத்கர் நகர், உழைப்பாளர் நகர், கரிமேடு, முத்தாபுதுப்பேட்டை பகுதிகளை சேர்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பணத்தை அள்ளிச்சென்றதாக கூறப்படுகிறது.




ஆனால் அதுகுறித்த தகவல் இதுவரை காவல்துறைக்கு அளிக்கப்படவில்லையாம். அந்த பகுதியைச்சேர்ந்த ராணுவத்தில் உள்ள உயரதிகாரிகள்தான் தங்கள் பணத்தை கொட்டியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் வேறு இடத்திலிருந்து அப்பகுதிக்குள் வந்து பணத்தை கொட்டுவது சாதாரணமான விஷயமில்லை என தெரிகிறது. மைதானத்தில் கொட்டப்பட்டிந்த பணத்தின் மதிப்பு சுமார் 1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை

0 comments:

Post a Comment

Site Search