#

#

Monday, September 5, 2016

10ம் வகுப்பு வரை படித்துவிட்டு மருத்துவமனையில் பணியாற்றிய 2 போலி டாக்டர்கள் கைது








ஆவடி :  திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் டாக்டர் தேவா மருத்துவமனை உள்ளது. இதில் போலி டாக்டர்கள் பணியாற்றி வருவதாக திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சுகாதாரத்துறை இணை இயக்குனர் மோகனன், துணை இயக்குனர் தயாளன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அங்கு வந்தனர் .அதிகாரிகள் குழுவினர் டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதன்பிறகு டாக்டர்களின் சான்றிதழ்களை சரி பார்த்தனர். அப்போது  ஒருவர் போலி டாக்டர் என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆவடி அடுத்த பட்டாபிராம் குமரன் தெருவை சேர்ந்த விஸ்வேஸ்வர ராவ் (56) என்பதும் 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு 3  மாதமாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் போலி டாக்டர் விஸ்வேஸ்வரராவை திருநின்றவூர் போலீசில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விஸ்வேஸ்வரராவை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.
திருநின்றவூர் அருகே பாக்கம், சீனிவாசன் நகரை சேர்ந்தவர் குணசேகர் (65). இவரது வீட்டிலேயே மருத்துவமனை நடத்தி, பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இவர் போலி டாக்டர் என, மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.இதையடுத்து, அதிகாரிகள் நேற்று மாலை, குணசேகரன் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர், 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். ‘என தெரிந்தது. இதையடுத்து, குணசேகரனை, திருநின்றவூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

0 comments:

Post a Comment

Site Search