சென்னை : சட்டப்பேரவையில் நேற்று வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று ஆவடி தொகுதி பாண்டியராஜன் (அதிமுக) பேசியதாவது: மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வர முயற்சி செய்தபோது, தமிழக முதல்வர் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றார். ஆனால், மத்திய அரசு மாற்றம் செய்யாததால் அந்த மசோதாவை அதிமுக எதிர்த்தது.
சென்னை சேத்துப்பட்டு ஏரி சீரமைக்கப்பட்டு, பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோன்று ஆவடி தொகுதியில் உள்ள பருத்திப்பட்டு ஏரியை மறுசீரமைப்பு செய்து பொழுதுபோக்கு பூங்காவாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment