#

#

Monday, September 5, 2016

பள்ளிக்கல்வி அமைச்சராக பாண்டியராஜன் பதவியேற்பு


தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.பாண்டியராஜன் பதவியேற்றார்.
தமிழகத்தில் கடந்த மே 16-ம் தேதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடந்தது. இதில், அதிமுக வெற்றி பெற்று, 6-வது முறையாக ஜெயலலிதா முதல்வரானார். அவ ருடன் 28 அமைச்சர்கள் பதவியேற் றனர். இதையடுத்து, அமைச்சரவை யில் மேலும் 4 பேர் சேர்க்கப் பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சட்டப் பேரவையில் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பால்வளத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சண்முகநாதன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில், ஆவடி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாண்டியராஜன் அமைச்சரவை யில் சேர்க்கப்பட்டார்.
தற்போது பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். கே.டி.ராஜேந்திர பாலாஜி கவ னித்து வந்த ஊரக தொழில்துறை, பி.பெஞ்சமின் வசம் சென்றது. அவர் கவனித்து வந்த பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச் சரவையில் புதிதாக சேர்க்கப்பட்ட கே.பாண்டியராஜனுக்கு ஒதுக் கப்பட்டுள்ளது.
நேற்று சட்டப் பேரவை நிகழ்ச்சி யில் பங்கேற்க வந்த பாண்டியராஜ னுக்கு சக உறுப்பினர்கள் அவர் அமர்ந்திருக்கும் பகுதிக்கே சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று மாலை 4.35 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளி கையில் புதிய அமைச்சர் பதவி யேற்பு விழா நடந்தது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், ஆளுநர் கே.ரோசய்யா, புதிய அமைச்சர் பாண்டியராஜனுக்கு பதவிப் பிரமாணம், ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, ஆளுநர், முதல்வருடன் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தலை மைச் செயலர் பி.ராமமோகனராவ், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் உள் ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment

Site Search