#

#

Monday, September 5, 2016

ஆவடி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி இறந்தார்


ஆவடி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி இறந்தார்.
ஆவடி கோவில் பதாகை எஸ்.ஏ.பி.காலனியைச் சேர்ந்த முரளி மகன் குமார் (16). ஆவடியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் அருகில் உள்ள ஏரியில் தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏரியின் ஆழப் பகுதியில் சேற்றில் குமார் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குமார் இறந்தார்.

0 comments:

Post a Comment

Site Search