#

#

Monday, October 24, 2016

ஆவடி, அயப்பாக்கம் இடையே குண்டும் குழியுமாக மாறிய கேம்ப் சாலை; தினமும் மக்கள் தவிப்பு





சென்னை : ஆவடியில் இருந்து அயப்பாக்கம் வழியாக தனக்கில்லா கேம்ப் சாலை செல்கிறது. இச் சாலையில் உள்ள அயப்பாக்கத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அத்துடன் பள்ளி, கல்லூரிகள் செயல்படுகின்றது. மின்வாரிய அலுவலகமும் உள்ளது. இந்த பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்கின்றவர்கள் தனக்கில்லா கேம்ப் சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக உடைந்துக்கிடந்தது. இதனால் இச்சாலை வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. மாணவ, மாணவிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல கடும் சிரமப்பட்டனர். இதையடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பகுதி சாலை அமைக்கப்பட்டது. அது தரமாக இல்லாததால் சில மாதங்களிலேயே உடைந்து ஜல்லி கற்கள் அனைத்தும் வெளியே வந்துவிட்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. 

இதுபற்றி அயப்பாக்கம் மக்கள் கூறுகையில், ‘’தனக்கிலா கேம்ப் ரோடு உடைந்து போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் பஸ்கள் நிறுத்தப்பட்டது. சிலரின் முயற்சியால் தற்போது ஒருசில பஸ்கள் சென்று வருகின்றன. வணிக வளாகம், கடைகள், பல ஆயிரம் வீடுகள் வந்தபிறகும் அயப்பாக்கம் ஊராட்சியாகவே உள்ளது. எனவே, அயப்பாக்கம் ஊராட்சியை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும். அல்லது ஆவடி பெரு நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்றனர்.

0 comments:

Post a Comment

Site Search