#

#

Sunday, October 30, 2016

ஆவடி பொன்னு பஜாரில் தீ விபத்து

ஆவடி, -ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள பொன்னு சூப்பர் மார்க்கெட்டில் 4 தளங்கள் உள்ளன. இதில் மளிகை, துணிமணிகள், ஸ்டேஷனரி, பொம்மை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. 25/10/2016 அன்று வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு உரிமையாளர் ஆனந்தன் வீட்டுக்கு சென்றார். 3 வாட்ச்மேன்கள் இரவு காவல் பணியில் இருந்தனர்.இந்த சூப்பர் மார்க்கெட்டின் முதல் தளத்தில் துணிமணி பிரிவில் நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த வாட்ச்மேன்கள் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு...

Monday, October 24, 2016

ஆவடி, அயப்பாக்கம் இடையே குண்டும் குழியுமாக மாறிய கேம்ப் சாலை; தினமும் மக்கள் தவிப்பு

சென்னை : ஆவடியில் இருந்து அயப்பாக்கம் வழியாக தனக்கில்லா கேம்ப் சாலை செல்கிறது. இச் சாலையில் உள்ள அயப்பாக்கத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அத்துடன் பள்ளி, கல்லூரிகள் செயல்படுகின்றது. மின்வாரிய அலுவலகமும் உள்ளது. இந்த பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்கின்றவர்கள் தனக்கில்லா கேம்ப் சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக உடைந்துக்கிடந்தது. இதனால் இச்சாலை வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. மாணவ, மாணவிகள்,...

ஆவடி நகராட்சியில் கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை பணி

ஆவடி : ஆவடி நகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட குடிநீர், பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இது குறித்து தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பினர். இதையடுத்து, கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டத்துக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டங்களுக்கு ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.271 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், இத்திட்டத்தின்கீழ் பொதுமக்களின் பங்களிப்பாக,...

ஆவடி அருகே, ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.42 லட்சம் கையாடல் செய்தவர் கைது 4 மாதத்துக்கு பிறகு போலீசிடம் சிக்கினார்

ஆவடி அருகே ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.42 லட்சம் கையாடல் செய்துவிட்டு தலைமறைவான ஊழியரை 4 மாதங்களுக்கு பின்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர். தனியார் நிறுவன ஊழியர் சென்னை நந்தனத்தில் ‘ரைட்டர்ஸ் சேப் கார்ட்’ என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இதன் மூலம் வங்கிகளில் பணத்தை பெற்று ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று பணம் நிரப்புவார்கள். இதில் பொறுப்பாளராக ஆவடி ஜே.பி. எஸ்டேட் சரஸ்வதி நகரை சேர்ந்த டில்லிகுமார் (வயது 34) என்பவர் 9 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இவர், அன்றாடம் காலை நிறுவனத்துக்கு...

வீட்டை உடைத்து 11 பவுன் கொள்ளை - பட்டாபிராமில் மர்ம நபர்கள் துணிகரம்

புழல், -பட்டாபிராம் பகுதியில் வீடு உடைத்து 11 பவுன் நகைகள் கொள்ளையடித்து தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ஆவடி அடுத்த பட்டாபிராம், காசி நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (55). இவரது மனைவி சசிகலா (52). இவர்கள் கடந்த 18ம் தேதி கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர்.  அங்கிருந்து நேற்று மதியம் வீடு திரும்பினர். வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோவை மர்ம ஆசாமிகள் உடைத்து, அதில் வைத்திருந்த 11 சவரன் தங்க...

திருவள்ளூரில் மர்ம காய்ச்சலுக்கு 5வயது குழந்தை பலி

திருவள்ளூரில் மர்ம காய்ச்சலுக்கு 5வயது குழந்தை பலியானது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பஜனைகோவில் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி சீனிவாசனின் ஐந்து வயது மகள் தர்ஷினி ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தர்ஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே...

நண்பருக்கு அடி உதை - குடிக்க பணம் தராததால் ஆத்திரம்

புழல், -குடிக்க பணம் தராததால் நண்பரை கட்டையால் அடித்து உதைத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.ஆவடி, திருமலை பிரியா நகரில் கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இங்கு ஆவடியை சேர்ந்த ரவி (25), பூம்பொழில் நகரை சேர்ந்த கலைச்செல்வன் (25) ஆகியோர் தங்கி  வேலை செய்தனர். நேற்றிரவு இருவரும் மது அருந்திக்கொண்டிருந்ததாக தெரிகிறது.  போதை குறைவாக இருந்ததால் மேலும் மது குடிக்க கலைச்செல்வனிடம் ரவி பணம்  கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் கடும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த கலைச்செல்வன் திடீரென...

ஆவடி அருகே வீட்டுக்குள் புகுந்து நகை கொள்ளை

புழல், -ஆவடி அடுத்த பட்டாபிராம், சாஸ்திரி நகர், வஉசி தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (34). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தனது தாயாரைப் பார்ப்பதற்காக பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார்.இதனால் அசோக்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு இரவு பணிக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை பணி முடிந்து அசோக்குமார் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டுக் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்றபோது, வீட்டில் பதுங்கியிருந்த ஒரு மர்ம ஆசாமி அசோக்குமாரை தள்ளிவிட்டு...

ஆவடி அருகே மகனை கத்தியால் குத்திய தந்தை கைது

ஆவடியை அடுத்த கரலப்பாக்கம் அண்ணா சாலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 52). இவரது மகன் ஜம்புலிங்கம் (25) லாரி கிளீனராக வேலை பார்த்து வருகிறார். ஜம்புலிங்கம் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் குடும்பத்துக்கு கொடுக்காமல் வீண் செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தந்தைக்கும்–மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை கிருஷ்ணமூர்த்தி மகன் ஜம்புலிங்கத்திடம் வீண் செலவு செய்வதை கண்டித்துள்ளார். இதையடுத்து ஜம்புலிங்கம், தந்தை கிருஷ்ணமூர்த்தியை...

Sunday, October 16, 2016

ஆவடி அருகே மாயமான வாலிபர், ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை

ஆவடி, மாயமான வாலிபர், ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். வாலிபர் மாயம் ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை தண்ணீர் கிணறு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் பிரசாந்த் (வயது 19). நேற்று முன்தினம் மாலை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரசாந்த், அதன் பிறகு வீடு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கேயும் பிரசாந்தை காணவில்லை....

ஆவடி நகராட்சியில் விரைவில் குடிநீர் இணைப்புகள்: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆவடியைச் சேர்ந்த என்.பாபு கணேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ஆவடி நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டம் 2 ஆண்டுகளில் முடிந்திருக்க வேண்டும். குறித்த காலத்தில் நிறைவு பெறாததால் 2009-ல் போராட்டங்கள் நடை பெற்றன. அதன்பிறகும், இத்திட்டம் முழுமையாக முடியவில்லை. எனவே, தாமதமாகும் பணிகளை விரைந்து முடித்து குடிநீர் வழங்க நகராட்சி அதிகாரிகளுக்கு...

Thursday, October 6, 2016

ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1000 லஞ்சம் வாங்கிய அலுவலர் கைது. வீடியோ இணைப்பு

                                                                    நன்றி   புதிய தலைமுறை ...

Tuesday, October 4, 2016

ஆவடியில் அனைத்து காய்கறிகள் விதைகள் விற்பனை --இலவச ஹோம் டெலிவரியுடன்

                           ஆர்கானிக் கடைகள் தெருக்கு தெரு பெருகி வருகின்றன. அப்படி இருந்தும் அங்கு விற்கப்படும் பொருட்களின் விலை குறைந்தபாடில்லை. கேட்டால் எல்லாம் இயற்கை உரம் போட்டு தயாரித்தது என்கிறார்கள். ‘‘எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் பத்தாண்டுகளில் எல்லாமே ஆர்கானிக்காக மாறிவிடும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்போது, சாதாரண கடைகளில் கூட ஆர்கானிக் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும்.       ...

விவசாயம் செய்யும் ஐடி பெண்

ஆர்கானிக் கடைகள் தெருக்கு தெரு பெருகி வருகின்றன. அப்படி இருந்தும் அங்கு விற்கப்படும் பொருட்களின் விலை குறைந்தபாடில்லை. கேட்டால் எல்லாம் இயற்கை உரம் போட்டு தயாரித்தது என்கிறார்கள். ‘‘எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் பத்தாண்டுகளில் எல்லாமே ஆர்கானிக்காக மாறிவிடும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்போது, சாதாரண கடைகளில் கூட ஆர்கானிக் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும். விலையும் குறையும்...’’ என்று அடித்து கூறுகிறார் ரேகா. இவர் சென்னையில் ஆர்கானிக் ஃபார்ம் மார்க்கெட் என்ற கூட்டுறவு சந்தையை...

Site Search