#

#

Monday, October 24, 2016

ஆவடி அருகே வீட்டுக்குள் புகுந்து நகை கொள்ளை



புழல், -ஆவடி அடுத்த பட்டாபிராம், சாஸ்திரி நகர், வஉசி தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (34). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தனது தாயாரைப் பார்ப்பதற்காக பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார்.இதனால் அசோக்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு இரவு பணிக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை பணி முடிந்து அசோக்குமார் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டுக் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்றபோது, வீட்டில் பதுங்கியிருந்த ஒரு மர்ம ஆசாமி அசோக்குமாரை தள்ளிவிட்டு வெளியே வேகமாக ஓடினான். இதனால் அதிர்ந்த அசோக்குமார், திறந்து கிடந்த வீட்டு பீரோவை பார்த்தார்.

அதில் வைத்திருந்த அனைத்து துணிமணிகளும் நாலாபுறமும் சிதறிக் கிடந்தது. பீரோவில் இருந்த பொருட்களை அசோக்குமார் சரிபார்த்தபோது, பீரோ லாக்கரில் இருந்த 6 சவரன் தங்க நகைகளை காணவில்லை. அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்ம ஆசாமி, விடியும்வரை அங்கேயே இருந்து, பீரோவில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது அசோக்குமாருக்குத் தெரியவந்தது.இப்புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடி மர்ம ஆசாமி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Site Search