#

#

Sunday, October 30, 2016

ஆவடி பொன்னு பஜாரில் தீ விபத்து






ஆவடி, -ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள பொன்னு சூப்பர் மார்க்கெட்டில் 4 தளங்கள் உள்ளன. இதில் மளிகை, துணிமணிகள், ஸ்டேஷனரி, பொம்மை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. 25/10/2016 அன்று வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு உரிமையாளர் ஆனந்தன் வீட்டுக்கு சென்றார். 3 வாட்ச்மேன்கள் இரவு காவல் பணியில் இருந்தனர்.
இந்த சூப்பர் மார்க்கெட்டின் முதல் தளத்தில் துணிமணி பிரிவில் நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த வாட்ச்மேன்கள் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.அம்பத்தூர், ஆவடி, டேங்க் பேக்டரி ஆகிய 3 இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் பல லட்சம் மதிப்புள்ள துணிமணிகள் எரிந்து சேதமாகிவிட்டன என்று கூறப்படுகிறது.
ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

0 comments:

Post a Comment

Site Search