#

#

Monday, October 24, 2016

திருவள்ளூரில் மர்ம காய்ச்சலுக்கு 5வயது குழந்தை பலி




திருவள்ளூரில் மர்ம காய்ச்சலுக்கு 5வயது குழந்தை பலியானது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பஜனைகோவில் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி சீனிவாசனின் ஐந்து வயது மகள் தர்ஷினி ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் தர்ஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தற்போதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment

Site Search