#

#

Monday, October 24, 2016

நண்பருக்கு அடி உதை - குடிக்க பணம் தராததால் ஆத்திரம்





புழல், -குடிக்க பணம் தராததால் நண்பரை கட்டையால் அடித்து உதைத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடி, திருமலை பிரியா நகரில் கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இங்கு ஆவடியை சேர்ந்த ரவி (25), பூம்பொழில் நகரை சேர்ந்த கலைச்செல்வன் (25) ஆகியோர் தங்கி  வேலை செய்தனர். நேற்றிரவு இருவரும் மது அருந்திக்கொண்டிருந்ததாக தெரிகிறது.  போதை குறைவாக இருந்ததால் மேலும் மது குடிக்க கலைச்செல்வனிடம் ரவி பணம்  கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் கடும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த கலைச்செல்வன் திடீரென அங்கு கிடந்த கட்டையை எடுத்து ரவியை சரமாரியாக தாக்கியுள்ளார். 

மண்டையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதால் மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் பயந்துபோன கலைச்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.அப்பகுதியினர் ரவியை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கலைச்செல்வனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Site Search