#

#

Tuesday, September 6, 2016

இந்தியா வரும் வெளிநாட்டுப் பெண்கள் குட்டை பாவாடை அணியகூடாது..




                  இந்தியா வரும் வெளிநாட்டு பெண்கள் குட்டை பாவாடை அணிய கூடாது என மத்திய சுற்றுழா மற்றும் கலாச்சாரதுரை அமைச்சர் மகேஷ் சர்மா பேசியுள்ளார்.இதன் மூலம் பல உண்மைகளை தன்னை அறியாமலேயே ஒப்புகொண்டுள்ளார்.
     
                         வெளிநாட்டு சுற்றுழாப் பயணிகளுக்கான 1363 ந்ன்ற உதவி எண் சேவையை அறிமுகம் செய்து வைத்த பிறகு மகேஷ் ஷர்மா செய்தியாள்ர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் வெளிநாட்டு சுற்றுழா பயணிகள் விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது அவர்களுக்கு வைக்கபடும் வரவேற்பு பதாகைகளிலேயே எவற்றை எல்லம் செய்யலாம் எவற்றை எல்லம் செய்யகூடாது என்ற கட்டுபாட்டை குறிப்பிடவேண்டும்.
                           குறிப்பாக அவர்கள் சிறிய நகரங்களுக்கு வந்தால் ,

 1.இரவில் தனியாக வெளியில் சுற்றி திறிய கூடாது.,
2.ஸ்கர்ட் போன்ற குட்டை பாவாடை களை அணியகூடாது.
                 
                          நமது நாட்டிற்கு வருபவர்களுக்கு  ஏன் ஆடை கட்டுபாடு விதிக்க கூடாது.என அவர் கேள்வி எழுப்பினார்.ஆபாச ஆடை அணியும் பெண்கள் ஆண்களின் வக்கிற பார்வைக்கு ஆளாகி அதன் காரணமாக பல அசம்பாவிதங்கள் நடக்கின்றன.இதை நாம் வறவேற்கிறோம் .
                             இது போல ஆபாச ஆடை அணியும் இந்திய பெண்களுக்கும் வக்கிர பார்வை பார்க்கும் ஆண்களால் ஏற்படுமல்லவா? அப்படியானால் அனைத்து பெண்களுக்கும் இந்த கட்டளை பொருந்துமே!
                                இதை உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல சட்டங்களை இயற்றினால் பெண்களின் மானம் காக்கபடும் .
                                பெண்கள் தமது உடலை  முழுமையாக மூடுவதற்கு ஊக்கபடுத்தவேண்டும் .




                                                                                     -----------நன்றி  உணர்வு-------------

டொனால்டு ட்ரம்பிற்கு நிர்வாண சிலை :எதிர்ப்பின் உச்சிக்கு சென்ற அமெரிக்கர்கள் !



அமெரிக்கா அதிபர் பரக் ஒபாமாவின் பதவி  காலம் இந்த ஆண்டோடு முடிவடைகிறது .இதனால் வருகிற நவம்பர் 8 ஆம் தேதி அதிபர் தேர்தல் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஒரு முனையில் ஹிலாரியும் ,மற்றொரு முனையில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர் .இதில் ஹிலாரியின் தேர்தல் பிரச்சாரம் அமைதியான முறையிலும் அரசியல் சாசனதிற்கு உட்பட்டும் அமைந்திருக்கிறன . டொனால்டு டிரம்பு பிரச்சாரமோ  அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் ,வன்முறை வித்திடும்  வகையில் அமைந்திருக்கிறது. அதில் குறிப்பிட்ட ஒன்றை சொல்வதாக என்றால் ,

முஸ்லிம்களை விரட்டி அடிப்பேன் :
          நான் அதிபராகிவிட்டால் அமெரிக்காவில் முஸ்லிம்களை அனுமதிக்கமாட்டேன் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்களை விரட்டி அடிப்பேன் என்றும்  அவர் சொல்வது தான் அவர் பிரச்சாரத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது. இதனால் டொனால்டு டிரம்ப் பிரச்சாரத்திற்கு பல விதமான எதிர்புகள் புகைந்து வருகிறது.
          இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அரசியல் சாரா அமைப்புகளும் கூட பல  வித்தியாசமான முறையில் டொனால்டு டிரம்பிற்கு எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
                                                  NO BALLS
                          இதில்  INDECLINE (இண்டிக்லைன்)  என்ற அரசியல் சாரா அமைப்பு ஒன்று வித்தியாசமான முறையில் பல எதிர்புகளை டிரம்பிற்கு தெரிவித்து வருகிறது. அதன் எதிர்பின் உச்சகட்டமாக டிரம்பின் முழு நிர்வாண சிலையை அமெரிக்காவின் பாப்புலரான இடங்களில் வைத்து தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றது அந்த அமைப்பு. இந்த முழு உருவ சிலை மாதிரி நியூயார்க்,லாஸ்ஏஞ்சல்ஸ்,ப்ரான்ஸிஸ்கோ,கிளேவளண்ட் ஆகிய இடங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது.


                                                                                                                   ----நன்றி உணர்வு.-------

8 லட்ச ரூபாய்க்கு சேலை எடுத்து அரசாங்க கணக்கில் சேர்த்த பா .ஜ.க பெண் அமைச்சர் புதிய ஊழல்


மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிதி இரானி, 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சேலைகளை வாங்கி கொண்டு அதற்கான தொகையை துறைரீதியான செலவுகளில் சேர்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது, தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த ஸ்மிதி இரானி தற்போது ஜவுளித்துறையை கவனித்து வருகிறார்.
அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதிலிருந்து அத்துறையின் செயலாளராக உள்ள ரேஷ்மி வர்மாவுடன் அவர் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ஜவுளித்துறைக்கு கீழ் இயங்கும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஸ்மிதி இரானி, சில லட்சம் ரூபாய் மிதிப்புள்ள சேலைகளையும், விநாயகர் சிலை ஒன்றையும் வாங்கியுள்ளார்.
இதற்கான பணத்தை கொடுக்காமல், ஜவுளித்துறையின் கணக்கில் இதனை சேர்க்கும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்த துறை செயலாளர் ரேஷ்மி, சொந்த செலவுகளுக்கு அரசு பணம் வழங்க முடியாது எனக் கூறி பணம் வழங்க மறுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக பிதரமர் அலுவலகத்திலும் ரேஷ்மி புகார் அளித்தாகவும் கூறப்படுகிறது. இந்த புகாரை முற்றிலுமாக மறுத்துள்ள ஸ்மிருதி, இதனை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள தனக்கு நெருங்கியவர்கள் மூலமாக ரேஷ்மியின் குற்றச்சாட்டு அடங்கிய கோப்புகளை அப்புறப்படுத்தவும் ஸ்மிதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி கோசாலையில் இறந்த 46 ஆயிரம் மாடுகள்: அதிர்சி தகவல்...

           
 
           டெல்லி மாநகராட்சி சார்பில் பசுக்கள் மற்றும் வயதான காளை மாடுகளை பராமரிக்க 5 கோசாலைகள் நடத்தபடுகின்றன.இந்த 5 கோசாலைகள் மூலம் 24 ஆயிரம் மாடுகளை பாதுகாக்க வசதி செய்யபட்டுள்ளது.
              தெற்கு டெல்லி மாநகராட்சியில் செயல்படும் கோசாலைக்கு கடந்த 2015-16 ஆம் ஆண்டில் 3,398 மாடுகள் பாதுகாப்பதற்கு அனுப்பி வைக்கபட்டன. இதே ஆண்டில் அந்த கோசாலையில் 3,185 மாடுகள் உயிரிழந்தன .அதற்கு முந்தைய 2014-215 ஆம் ஆண்டில் 2,974 மாடுகள்: இதில் 3,140 மாடுகள் இறந்து விட்டன .
              மேலும் கிழக்கு டெல்லி மாநகராட்சி கோசாலைக்கு சொந்தமான கோசாலைக்கு 2015 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 190 மாடுகள் அனுப்பபட்டன.இதில் 12 மாடுகள் இறந்துவிட்டன.
               இதில் கடந்த 2011 ம் ஆண்டில் டெல்லி கோசாலைக்கு அனுப்பபட்ட 49 ஆயிரம் மாடுகளில் 46 மாடுகள்  இறந்துவிட்டன.இது டெல்லி மாநகராட்சி தந்துள்ள புள்ளி விபரமாகும்.
                 இது போல் ராஜஸ்தான் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த 500 மாடுகள் சமீபத்தில் போதிய பராமரிப்பின்றி இறந்துள்ளன .இப்படி பசுவை பாதுகாப்பதற்காக அமைக்கபட்ட கோசாலைகளே பசுக்களின் மரண கூடங்களாக மாறி வரும் நிலையில் பசுவை பாதுகாப்பதாகச் சொல்லி  மனிதர்களை கொள்ளும் பசு நேசர்கள் –பசுக்களை பாதுகாப்தற்காக அரசு சார்பில் அமைக்கபட்ட கோசாலைகள் தோல்வி அடைந்து விட்டன .

           பசுவைவை பாதுகாப்பதாக என்று சொல்லி மனிதர்களை கொன்று குவிக்கிற நிகழ்வுகள் நம்முடைய இந்தியாவில்  பல இடங்களில் நடைபெற்றுகொண்டுவருகிறது. அப்படிபட்ட பசு நேசர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள் ?????????............

Monday, September 5, 2016

ஆவடி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி இறந்தார்


ஆவடி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி இறந்தார்.
ஆவடி கோவில் பதாகை எஸ்.ஏ.பி.காலனியைச் சேர்ந்த முரளி மகன் குமார் (16). ஆவடியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் அருகில் உள்ள ஏரியில் தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏரியின் ஆழப் பகுதியில் சேற்றில் குமார் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குமார் இறந்தார்.

ஆவடியிலிருந்து செல்லும் பேருந்து எண் மற்றும் செல்லும் இடம்



1120NSBroadway to Avadi
270NSAvadi to Tambaram
3F70Pattabiram to Guindy Tvk Estate
4L24CAvadi to V.House
5L40AAnna Square to Avadi
6L41DMandaveli to Avadi
7LA47Thiruvanmiyur to Avadi
8LA70Avadi to Pallavaram
9M150Broadway to Avadi
10M27HAnna Square to Avadi
11M61CAvadi to Muthapudupet
12M61KAvadi to Kanniamman Nagar
13M62Avadi to Kanniamman Nagar
1477Avadi to C.M.B.T.
15S120Broadway to Avadi
16S170PPattabiram to Tambaram
17S24CAvadi to V.House
18S266Avadi to Tambaram
19S27HAnna Square to Avadi
20S40AAnna Square to Avadi
21S41DMandaveli to Avadi
22S47DThiruvanmiyur to Avadi
23S536Ponneri to Pattabiram
24S563Ambathur Estate to Periyapalayam
25S565Pattabiram to Sriperumpudur
26S565AAvadi to Sunguvarchathiram
27S571Broadway to Thiruvallur
28SA47Thiruvanmiyur to Avadi
29SA70Avadi to Pallavaram
30SH70Pattabiram to Hasthinapuram
31X120Broadway to Avadi
32X134Pattabiram to Thiruvetriyur B.S
33X40AAnna Square to Avadi
34X41DMandaveli to Avadi
35X47DThiruvanmiyur to Avadi
36X572Ambathur Estate to Thiruvallur
37X580Avadi to Arani
38X70BAvadi to Chrompet
39X71VBroadway to Veppampattu Eswaran Nagar
40XB70Pattabiram to Guindy Tvk Estate
41XM77Avadi to C.M.B.T.
4247DThiruvanmiyur to Avadi
4365DAvadi to Melkondaiyur
4465GAvadi to Meyyur
4565HRed Hills to Avadi
46D70ETPattabiram to Velachery
47M61RAvadi to Red Hills
48M65EETPoonamallee to Avadi
49S562BPonneri to Poonamallee
50S580Avadi to Arani
51SA70KAvadi to Kilkattalai
52SB70Pattabiram to Guindy Tvk Estate
53X121EM.K.B.Nagar to Pattabiram
54X140AETVeppampattu Eswaran Nagar to Egmore
55X70BETAvadi to Chromepet Lakshmipuram
56X70PETVeppampattu Eswaran Nagar to T.Nagar
57Z70AAvadi to Vandaloor Zoo

ஆவடி முதல் தாம்பரம் வரை புதிய பேருந்து இயக்கம்



ஆரம்பத்தில் ஆவடியிலிருந்து  தாம்பரம் வரை செல்வதாக இருந்தால் 70 என்ற பேருந்து அம்பத்தூர், பாடி, திருமங்கலம், சென்னை புறநகர் பேருந்து நிலையம், வடபழனி, அசோக் பில்லர், சென்னை Airport, பல்லாவரம், குரோம்பேட்டை வழியாக தாம்பரம் செல்லும் .அதற்காக ஆக கூடிய நேரமோ 2 மணி நேரம் ஆகும் .ஆதலால் பயண நேரத்தை குறைக்க 266 என்ற எண் (கோவர்த்தனகிரி, காடுவெட்டி  கரையான்சாவடி, குமணன்சாவடி, மாங்காடு, குன்றத்தூர், பல்லாவரம்
. வழியாக தாம்பரம்  செல்லும் இப்பேருந்து பயண நேரமோ 1 மணிநேரம் ஆகும்.ஆனால் தற்போது அந்த வழிதடங்களில் அதிகமான போக்குவரத்து நெரிசல் காரணமாக தாம்பரம் செல்வதற்கு அதிக நேரம் பிடிக்கிறது .

                  தற்போது ஆவடி to தாம்பரம் புதிய வழிதடத்துடன்  மாநகர போக்குவரத்து கழகம் 202Exp என்ற பேருந்து இயங்கிகொண்டு வருகிறது.இப்பேருந்து அதிகபட்சமாக 1 மணிநேரதிற்குள்ளாகவே தாம்பரத்திற்கு செல்கிறது .இப்பேருந்து புறப்படும் நேரம் மேலே உள்ள படத்தில் குறிப்பிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி அமைச்சராக பாண்டியராஜன் பதவியேற்பு


தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.பாண்டியராஜன் பதவியேற்றார்.
தமிழகத்தில் கடந்த மே 16-ம் தேதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடந்தது. இதில், அதிமுக வெற்றி பெற்று, 6-வது முறையாக ஜெயலலிதா முதல்வரானார். அவ ருடன் 28 அமைச்சர்கள் பதவியேற் றனர். இதையடுத்து, அமைச்சரவை யில் மேலும் 4 பேர் சேர்க்கப் பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சட்டப் பேரவையில் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பால்வளத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சண்முகநாதன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில், ஆவடி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாண்டியராஜன் அமைச்சரவை யில் சேர்க்கப்பட்டார்.
தற்போது பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். கே.டி.ராஜேந்திர பாலாஜி கவ னித்து வந்த ஊரக தொழில்துறை, பி.பெஞ்சமின் வசம் சென்றது. அவர் கவனித்து வந்த பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச் சரவையில் புதிதாக சேர்க்கப்பட்ட கே.பாண்டியராஜனுக்கு ஒதுக் கப்பட்டுள்ளது.
நேற்று சட்டப் பேரவை நிகழ்ச்சி யில் பங்கேற்க வந்த பாண்டியராஜ னுக்கு சக உறுப்பினர்கள் அவர் அமர்ந்திருக்கும் பகுதிக்கே சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று மாலை 4.35 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளி கையில் புதிய அமைச்சர் பதவி யேற்பு விழா நடந்தது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், ஆளுநர் கே.ரோசய்யா, புதிய அமைச்சர் பாண்டியராஜனுக்கு பதவிப் பிரமாணம், ரகசிய காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, ஆளுநர், முதல்வருடன் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தலை மைச் செயலர் பி.ராமமோகனராவ், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் உள் ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

சேத்துப்பட்டு பூங்கா போன்று ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு ஏரியை மாற்ற வேண்டும்



சென்னை : சட்டப்பேரவையில் நேற்று வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று ஆவடி தொகுதி பாண்டியராஜன் (அதிமுக) பேசியதாவது: மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வர முயற்சி செய்தபோது, தமிழக முதல்வர் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றார். ஆனால், மத்திய அரசு மாற்றம் செய்யாததால் அந்த மசோதாவை அதிமுக எதிர்த்தது. 

சென்னை சேத்துப்பட்டு ஏரி சீரமைக்கப்பட்டு, பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோன்று ஆவடி தொகுதியில் உள்ள பருத்திப்பட்டு ஏரியை மறுசீரமைப்பு செய்து பொழுதுபோக்கு பூங்காவாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

10ம் வகுப்பு வரை படித்துவிட்டு மருத்துவமனையில் பணியாற்றிய 2 போலி டாக்டர்கள் கைது








ஆவடி :  திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் டாக்டர் தேவா மருத்துவமனை உள்ளது. இதில் போலி டாக்டர்கள் பணியாற்றி வருவதாக திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சுகாதாரத்துறை இணை இயக்குனர் மோகனன், துணை இயக்குனர் தயாளன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அங்கு வந்தனர் .அதிகாரிகள் குழுவினர் டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதன்பிறகு டாக்டர்களின் சான்றிதழ்களை சரி பார்த்தனர். அப்போது  ஒருவர் போலி டாக்டர் என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆவடி அடுத்த பட்டாபிராம் குமரன் தெருவை சேர்ந்த விஸ்வேஸ்வர ராவ் (56) என்பதும் 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு 3  மாதமாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் போலி டாக்டர் விஸ்வேஸ்வரராவை திருநின்றவூர் போலீசில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விஸ்வேஸ்வரராவை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.
திருநின்றவூர் அருகே பாக்கம், சீனிவாசன் நகரை சேர்ந்தவர் குணசேகர் (65). இவரது வீட்டிலேயே மருத்துவமனை நடத்தி, பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இவர் போலி டாக்டர் என, மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.இதையடுத்து, அதிகாரிகள் நேற்று மாலை, குணசேகரன் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர், 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். ‘என தெரிந்தது. இதையடுத்து, குணசேகரனை, திருநின்றவூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

ஆவடியில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை







ஆவடி

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

கதவை திறக்கவில்லை

ஆவடியை அடுத்த கோவில்பதாகை புதிய மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் பிரபு(வயது 35). இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சசிகலா(32). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

வீட்டின் மாடியில் பிரபு தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கீழ் தளத்தில் பிரபுவின் பெற்றோர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை சசிகலாவின் மாமனார் துரை, மாடிக்கு சென்று பார்த்தார். கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சசிகலா, வீட்டின் உள்ளே மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இதற்கிடையில் பட்டாபிராம் காந்தி நகரில் வசிக்கும் சசிகலாவின் தந்தை மூர்த்தி (63) ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர், “சசிகலாவின் கணவர் பிரபு, மாமனார் துரை, மாமியார் செல்வி ஆகியோர் எனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால்தான் அவள் தற்கொலை செய்துகொண்டாள். எனவே பிரபு, துரை, செல்வி ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இதையடுத்து ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் குமரேசன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சசிகலாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார். மேலும் சசிகலாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார். 

பறக்கும் ரெயில் சேவையுடன் இணைந்து அரக்கோணம், திருவள்ளூர், ஆவடியில் இருந்து வேளச்சேரிக்கு மின்சார ரெயில் 25–ந்தேதி முதல் பரீட்சார்த்த முறையில் இயக்கம்





சென்னை,
பறக்கும் ரெயில் சேவையுடன் இணைந்து அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியில் இருந்து வேளச்சேரிக்கு ஒருங்கிணைந்த சேவையில் மின்சார ரெயில்கள் 25–ந்தேதி முதல் பரீட்சார்த்த முறையில் இயக்கப்பட உள்ளன.
மின்சார ரெயில்கள்
திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை ஆகிய மார்க்கங்களில் உள்ள பலர் வேளச்சேரிக்கு பணி ரீதியாக பயணிக்கின்றனர். இப்போது அவர்கள் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்துக்கோ அல்லது சென்டிரல் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கோ வந்து பின்னர், பறக்கும் ரெயில் நிலையத்துக்கு மாறி வேளச்சேரிக்கு பயணம் செய்து வருகின்றனர்.
இதுபோன்றவர்களின் வசதிக்காக அந்த மார்க்கத்தில் வேளச்சேரி வரை ஒருங்கிணைந்த ரெயில் சேவையை வழங்க 25–ந்தேதி முதல் ஆகஸ்டு 13–ந்தேதி வரை 3 வார காலத்துக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர) பரீட்சார்த்த முறையில் இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:–
ஆவடி–வேளச்சேரி
* ஆவடியில் இருந்து அதிகாலை 4.10, 4.25, காலை 6.10, 7.10., 8.15, 8.45, பிற்பகல் 12.10, 2.40, மாலை 4.20, 4.40, 5.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள், தொடர்ந்து அங்கிருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும்.
* அரக்கோணத்தில் இருந்து அதிகாலை 4.00, காலை 7.55, மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள்
* பட்டாபிராம் இ–டெப்போவில் இருந்து காலை 8.40, இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள்
திருவள்ளூர்–வேளச்சேரி
* கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 8.55, மாலை 4.30, இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள்
* திருவள்ளூரில் இருந்து காலை 11.05, பிற்பகல் 1.40, மாலை 5.55, 6.25, 7.45 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள்
* திருத்தணியில் இருந்து காலை 8.55 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்
சூலூர்பேட்டையில் இருந்து
* கடம்பத்தூரில் இருந்து பிற்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்
* சூலூர்பேட்டையில் இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் ஆகியவை அனைத்தும் வேளச்சேரி வரை தொடர்ந்து இயக்கப்படும்.
வேளச்சேரி–ஆவடி
* வேளச்சேரியில் இருந்து காலை 6.25, 7.25, 10.15, இரவு 8.30, 10.30 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள், ஆவடி வரையும்
* வேளச்சேரியில் இருந்து அதிகாலை 5.00 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில், பொன்னேரி வரையும்
* வேளச்சேரியில் இருந்து அதிகாலை 5.30, காலை 9.05, பிற்பகல் 12.15, 2.30, மாலை 4.55, 6.20, இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்கள், திருவள்ளூர் வரையும்
வேளச்சேரி–அரக்கோணம்
* வேளச்சேரியில் இருந்து காலை 8.20, 9.15, பிற்பகல் 12.55, மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள், பட்டாபிராம் இ–டெப்போ வரையும்
* வேளச்சேரியில் இருந்து காலை 8.50, பிற்பகல் 2.55, மாலை 5.45, இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள் கும்மிடிப்பூண்டி வரையும்
* வேளச்சேரியில் இருந்து பிற்பகல் 1.35 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில் அரக்கோணம் வரையும் தொடர்ந்து இயக்கப்படும்.
நேரத்தில் மாற்றம் இல்லை
* வேளச்சேரியில் இருந்து பிற்பகல் 1.55 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை வரையிலும், வேளச்சேரியில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில் திருத்தணி வரையிலும் தொடர்ந்து இயக்கப்படும்.
மேற்கூறப்பட்ட மின்சார ரெயில் சேவைகள் அனைத்தும் பொதுமக்களின் வசதிக்காக ஒருங்கிணைக்கப்பட்டு தான் இயக்கப்படுகின்றன. அதேபோல், அந்த மார்க்கத்தில் செல்லும் ரெயில்களின் நேரத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, September 4, 2016

கூகுளின் குரோம் செயலிகளுக்கு ஏற்பட்ட தடை:



                            கூகிளின்  குரோம் ஆப்ஸ்கள் இனி   விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் போன்றவற்றிற்கு கொடுத்து வந்த ஆதரவை நிறுத்த உள்ளது. ஆம் இது 2018 லிருந்து அமலுக்கு வரும் என  கூகுள் குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் அடுத்த வருடத்திலிருந்து குரோமிற்கு சப்போர்ட் செய்யும் ஆப்ஸக்கள்  அனைத்தும் குரோம் பயனர்களால்  மட்டுமே பயன்படுத்த முடியும்.

கூகிள் இது முதல்  , குரோம்  பயன்பாடுகளை     ஹோஸ்ட்டட் ஆப்ஸ்   (hosted apps) மற்றும் பேக்கேஜ்ட் ஆப்ஸ்  (packaged apps)  என இரண்டு வகையாக வகைப்படுத்தி  வழங்கி வருகிறார்கள் இரு வகைகள் உள்ளன. ஹோஸ்ட்டட் ஆப்ஸ்  அதாவது   நிறுவப்பட்ட செயலிகள் , அனைத்து பயனர்களும் இணையத்தில்   உதவியுடன் பெறும்படியும் , பேக்கேஜ்ட் ஆப்ஸ் அதாவது தொகுக்கப்பட்ட செயலிகள்   ஒரு சதவிகிதம்   விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் பயனர்களால் பயன்படுத்தப்பட்டும்  வந்தது.  தற்போது குரோம் ஹோஸ்ட்டட் ஆப்ஸ் மற்றும் பேக்கேஜ்ட் ஆப்ஸ்களுக்கு கொடுத்து வந்த ஆதரவினை அடுத்த 2 வருடங்களுக்கு முற்றிலுமாக தடை செய்யவுள்ளது.   இதனால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு குரோம் செயலிக்கு  கொடுத்து வந்த சப்போர்ட்  அனைத்தும் நிறுத்தப்படுவதால் பயனர்கள் வேறு ஒரு மாற்று தீர்வை தேடும்  நிலை ஏற்படும்.

Xiaomi Redmi Note 4 ஒரு பார்வை:



சீன  நாட்டினை சேர்ந்த சியோமி நிறுவனம்   ஆறு மாதங்களுக்கு முன்பு Xiaomi Redmi Note 3  சாதனத்தினை தயாரித்து வழங்கியதனை அடுத்து தற்போது Xiaomi Redmi Note 4-யினை அறிமுகப்படுத்தியது.   Xiaomi Redmi Note 3  சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பெரும் விற்பனையை ஈட்டி தந்தது குறிப்பிடத்தக்கது . அதே போலவே   Xiaomi Redmi Note 4 யும் அதீத விற்பனையை ஈட்டும் என எதிர்பார்த்துள்ளனர்.


Xiaomi Redmi Note 4 ல் அடங்கியுள்ள மிக முக்கிய சிறப்பு அம்சங்கள்:
    •     இந்த ஸ்மார்ட்போன்    deca-core MediaTek helio  X20  ப்ராசசர் மூலம் இயங்குகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய  16/64GB உள்ளடங்கியசேமிப்பு உடன் வருகிறது.
    • Redmi Note 4   ஸ்மார்ட்போனில் MIUI 8 யினை அடிப்படையாக கொண்ட  ஆண்ட்ராய்டு 6.0  Marshmallow  மூலம் இயக்கப்படுகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 13MP மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும்   5MP முன் எதிர்கொள்ளும்  கேமராவினையும் கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போனில் 401ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5   இன்ச்   டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. 
    • ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக  4G LTE, GPRS, 3G, 2G, GPS/A-GPS, ப்ளூடூத் ,     மைக்ரோ-யூஎஸ்பி , ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்  ஆகியவை வழங்குகிறது.
    •  இதில் 151×76.8×8.35mmபரிமாணங்கள் மற்றும் 175கிராம் எடையுடையது. இந்த கைப்பேசியில் 4100mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. 
    •  இது கோல்ட் , சில்வர் மற்றும்  கிரே  ஆகிய மூன்று வண்ண வகைகளில் வருகிறது.
    •  இந்த சாதனம் இரண்டு பதிப்புகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.   அதாவது  16 ஜிபி சேமிப்பு  கொண்ட மாடலின் விலை  சுமார் ரூ 9,000 எனவும் 64GBக்கான கொண்ட மாடலின் விலை சுமார்   ரூ 12,000 எனவும் நிர்ணயித்துள்ளனர்.

கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் எளிதாக வைத்தியம்...........



இப்போது தமிழ்நாட்டில் கோடை மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே இயற்கையில் உயிரினங்கள் இந்த மழைநீரை பயன்படுத்திக் கொண்டு தங்கள் சந்ததிகளை பெருக்கம் செய்வது உண்டு. குறிப்பாக கோடை மழையை பயன்படுத்தி ஆங்காங்கே விவசாயம் செழிப்பாக நடக்கும். இந்த கட்டத்தில் தான் பாம்புகளின் நடமாட்டமும் வயலில் இருக்கும். "பாம்பு கடித்தால் சாவு தான்" என்பது தான் பொதுவான கருத்து.
ஆனால் நம்மிடையே பல காலங்களாக இருந்து வந்த நாட்டுப்புற வைத்தியர்கள் இப்போது குறைந்து போனதால் நாட்டு மருந்துகளை பற்றிய விடயங்களும் மறைந்து வருகின்றன. முன்பெல்லாம் பாம்பு கடியை பற்றி அவ்வளவாக பயப்பட மாட்டார்கள். கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் எளிதாக வைத்தியம் பார்த்து பிழைத்துக்கொள்ளலாம் என்பதை உறுதியாக நம்புவார்கள்.
பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு. என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும் என்று விட்டு விடுபவர்கள் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். இன்றைக்கு அரசாங்கம் மக்களுக்கான பாம்பு கடி மருந்துகள் கூட பற்றாக்குறையில் இருக்குமளவுக்கு தான் அரசை நடத்துகிறது. நகரங்களில் நாய் கடித்தவர்களின் புள்ளி விவரம் இருக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை சரியாக இல்லை.
பாம்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ஊது சுருட்டை, வளனை, சாரை, தண்ணீர் பாம்பு( டிஸ்கவரி சேனலில் அவ்வப்போது பசிக்கு பியர் கிரில்ஸ் பிடித்து சாப்பிடுவது), கொம்பேறி மூக்கன், மலைப்பாம்பு, கருநாகம், சுண்டக்கருவினை, சாரை என்று பல வகை இருக்கின்றன.ஆனால் இவற்றில் மனிதனை கொல்லக்கூடிய அளவுக்கு விஷமுள்ளவை குறைவே. ஆனால் கடுமையான விஷமுள்ளவை என்று கருநாக வகை பாம்புகளின் கடி தான் ஆபத்தானவை. ஆனாலும் பாம்பு கடித்த அடுத்த நிமிடம் முதலுதவி கிடைத்து விட்டால் கடி பட்ட நபரை பிழைக்க வைத்து விடலாம் என்பது தான் அனுபவத்தில் கண்ட உண்மை.
இது தவிர கடிபட்ட நபர்கள் தன்னை கடித்தது என்ன பாம்பு என்று அடையாளத்தை சரியாக சொல்ல தெரிந்தால் அந்த நபருக்கு நச்சு முறிவு மருந்தை உடனடியாக தேர்வு செய்ய முடியும். பொதுவாக இப்படி அடையாளம் காண தெரியாமல் விடும் போது தரப்படும் தடுப்பு மருந்துகள் ஒருவரின் உயிரை பிழைக்க வைத்து விட்டாலும், கடி பட்ட இடத்தில் இருக்கும் தசை அணுக்கள் செயலற்று போய்விடுகின்றன.
எனவே பாம்பு கடித்து விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். நோயாளி சுயநினைவுடன் இருக்கும் போதே பாம்பின் அடையாளத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இருக்கும் சில பாம்பு பிடிக்கும் குழு மக்களுக்கு பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை என்று சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் சொல்வதை பார்க்க முடிந்தது. காரணம், காலம் காலமாக இந்த இனத்து மக்கள் பாம்பு பிடிப்பதும், அவர்கள் பாம்பு கடிபடும் போது அது அவர்கள் உடலில் நாளாவட்டத்தில் பாம்பு விஷத்தை முறித்துக்கொள்ளும் அளவு வலிமை பெற்றிருப்பதும் தெரியவந்தது. ஆனால் சாதாரண நபர்கள் பாம்புகளிடம் கடி பட்டால் பதறிவிடுகிறார்கள்.
பாம்பு கடித்ததும் ஐயோ....பாம்பு கடித்து விட்டதே என்று அதிர்ச்சியடைகிறார்கள். இப்படி ஏற்படும் அதிர்ச்சியும் பயமும் தான் அந்த நபரை மரணத்தின் விளிம்புக்கு அழைத்து சென்று விடுகிறது. பாம்பு கடித்து விட்டால் பதறக்கூடாது. இது தான் மிக முக்கியமானது. கடித்த பாம்பு தப்பித்து விட்டாலும் அதன் தோற்றத்தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது தான் மருத்துவர்கள் சரியான விஷ முறிவு மருந்தை தேர்வு செய்ய முடியும்.
பொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள். பொதுவாக பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீக்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.
மருத்துவர்கள் இல்லாத பல கிராமங்களில் இன்றும் இது நடைமுறையில் இருக்கிறது. இது தவிர பாம்பு கடி பட்ட நபர்களுக்கு வாழை மட்டையை திருகினால் வரும் சாற்றை எடுத்து குடிக்க கொடுப்பதுண்டு. இந்த வாழைப்பட்டை சாறு பாம்பின் விஷத்தை முறிக்கிறது என்பது கைகண்ட வைத்திய முறை. நாகப்பாம்பு அல்லது கருநாகம் கடித்திருந்தால் கடித்த இடத்தில் ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் ஒரு அங்குல இடைவெளி தென்படும். விரியன் பாம்பு கடித்திருந்தால் இரண்டிற்கும் மேற்பட்ட பற்குறிகள் காணப்படும். நல்ல பாம்பு கடித்தால் ரத்தம் வேகமாக உறையும். மற்ற பாம்புகள் கடித்தால் ரத்தம் உறையாமல் கடி இடத்திலிருந்து ரத்த ஒழுக்கு இருக்கும்.
பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.
பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு கடி பட்டவர் மூர்ச்சையாகி விட்டால் தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அவரது மூக்கினுள் சிறிது விட வேண்டும். இதனால் மூர்ச்சை தெளிந்து விடும். இது தவிர அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பாம்பின் நஞ்சு இறங்கி விடும். அருகம்புல்லின் வாசனை மூர்ச்சையை தெளிய வைக்கும்.
நஞ்சு இறங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும். அப்போது கசப்பு தெரிந்தால் நஞ்சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தும்பை இலை, தும்பை பூ ஆகிய இரண்டையும இடித்து சாற்றை குடிக்க தரவேண்டும். இப்படியான நாட்டு வைத்திய முறையில் பாம்பு கடிபட்டவரை முதலுதவி செய்து காப்பாற்றி விடலாம்.
சில பாம்புகள் கடித்தால் அறிகுறிகள்
நல்ல பாம்பு கடித்தால், கடிபட்ட இடத்தில் வலி இருக்கும். சிலருக்கு வலி தெரியாது. பார்வை மங்கும். கண் இமை சுருங்கும். நாக்கு தடிக்கும். பேச்சு குளறும். வாயில் எச்சில் வடியும். மூச்சு திணறும். நினைவு குறையும்.
கட்டு விரியன் கடித்தால் இந்த அறிகுறியுடன் வயிற்று வலியும் இருக்கும். கண்ணாடி விரியன் கடித்தால் கடிபட்ட இடத்தில் வலி கடுமையாக இருக்கும். கடிபட்ட இடத்தில் வீக்கம், மூச்சுதிணறல், வாந்தி, சோர்வு, சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் ரத்தம் வரும்.
எனவே பாம்பு கடித்தால் அலட்சியம் வேண்டாம். காரணம், சில நேரங்களில் அது மரணத்தை ஏற்படுத்தாவிட்டாலும் உடலின் முக்கிய பாகங்களில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விடும். உங்கள் கிராமங்கள் அவசர மருத்துவத்திற்கு எட்டாத இடத்தில் இருந்தால் இது போன்ற முதலுதவிகளை உடனே செய்ய அறிவுறுத்துங்கள்.

தொகுதி - ஓர் அறிமுகம்! ஆவடி



தொகுதி பெயர் : ஆவடி
தொகுதி எண் : 6
அறிமுகம் :
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்களை கொண்டுள்ள முதல் 10 தொகுதிகளில் ஆவடி 3-வது இடத்தில் உள்ளது.
எல்லை :
1977-ம் ஆண்டு முதல் பூந்தமல்லி தொகுதியில் இருந்து வந்த ஆவடி நகராட்சி, திருநின்றவூர், திருவேற்காடு பேரூராட்சிகள் உள்ளிட்ட பகுதிகள் மறு சீரமைப்புக்கு பிறகு ஆவடி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நடுகுத்தகை, நெமிலிச்சேரி கருணாகரசேரி ஊராட்சிகளும் ஆவடி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
ஆவடி நகராட்சிக்குட்பட்ட பட்டாபிராம், தண்டரை, சேக்காடு, கன்னிகாபுரம், திருமலைராஜபுரம், பக்வத்சலபுரம், நம்பெருமாள்பேட்டை, அண்ணனூர், சாந்திபுரம், திருமுல்லைவாயல், கோவில் பதாகை, முத்தாபுதுப்பேட்டை பகுதிகளை உள்ளடக்கிய 48 வார்டுகள்.
திருநின்றவூர், திருவேற்காடு பேரூராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து வார்டுகள். பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கருணாகரசேரி, நெமிலிச்சேரி, நடுகுத்தகை ஊராட்சிகள் மற்றும் அவற்றுக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களும் ஆவடி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் :
ஆண் பெண் திருநங்கைகள் மொத்தம்
1,35,635 1,30,257 22 2,65,914
வாக்குச்சாவடிகள் :
மொத்தம் : 295
தேர்தல் நடத்தும் அலுவலர்/ தொடர்பு எண் :
எம். செல்வராஜ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது),
9445008153

Site Search