சென்னை,
பறக்கும் ரெயில் சேவையுடன் இணைந்து அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியில் இருந்து வேளச்சேரிக்கு ஒருங்கிணைந்த சேவையில் மின்சார ரெயில்கள் 25–ந்தேதி முதல் பரீட்சார்த்த முறையில் இயக்கப்பட உள்ளன.
மின்சார ரெயில்கள்
திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை ஆகிய மார்க்கங்களில் உள்ள பலர் வேளச்சேரிக்கு பணி ரீதியாக பயணிக்கின்றனர். இப்போது அவர்கள் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்துக்கோ அல்லது சென்டிரல் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கோ வந்து பின்னர், பறக்கும் ரெயில் நிலையத்துக்கு மாறி வேளச்சேரிக்கு பயணம் செய்து வருகின்றனர்.
இதுபோன்றவர்களின் வசதிக்காக அந்த மார்க்கத்தில் வேளச்சேரி வரை ஒருங்கிணைந்த ரெயில் சேவையை வழங்க 25–ந்தேதி முதல் ஆகஸ்டு 13–ந்தேதி வரை 3 வார காலத்துக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர) பரீட்சார்த்த முறையில் இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:–
ஆவடி–வேளச்சேரி
* ஆவடியில் இருந்து அதிகாலை 4.10, 4.25, காலை 6.10, 7.10., 8.15, 8.45, பிற்பகல் 12.10, 2.40, மாலை 4.20, 4.40, 5.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள், தொடர்ந்து அங்கிருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும்.
* அரக்கோணத்தில் இருந்து அதிகாலை 4.00, காலை 7.55, மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள்
* பட்டாபிராம் இ–டெப்போவில் இருந்து காலை 8.40, இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள்
திருவள்ளூர்–வேளச்சேரி
* கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 8.55, மாலை 4.30, இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள்
* திருவள்ளூரில் இருந்து காலை 11.05, பிற்பகல் 1.40, மாலை 5.55, 6.25, 7.45 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள்
* திருத்தணியில் இருந்து காலை 8.55 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்
சூலூர்பேட்டையில் இருந்து
* கடம்பத்தூரில் இருந்து பிற்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்
* சூலூர்பேட்டையில் இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் ஆகியவை அனைத்தும் வேளச்சேரி வரை தொடர்ந்து இயக்கப்படும்.
வேளச்சேரி–ஆவடி
* வேளச்சேரியில் இருந்து காலை 6.25, 7.25, 10.15, இரவு 8.30, 10.30 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில்கள், ஆவடி வரையும்
* வேளச்சேரியில் இருந்து அதிகாலை 5.00 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில், பொன்னேரி வரையும்
* வேளச்சேரியில் இருந்து அதிகாலை 5.30, காலை 9.05, பிற்பகல் 12.15, 2.30, மாலை 4.55, 6.20, இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்கள், திருவள்ளூர் வரையும்
வேளச்சேரி–அரக்கோணம்
* வேளச்சேரியில் இருந்து காலை 8.20, 9.15, பிற்பகல் 12.55, மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள், பட்டாபிராம் இ–டெப்போ வரையும்
* வேளச்சேரியில் இருந்து காலை 8.50, பிற்பகல் 2.55, மாலை 5.45, இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள் கும்மிடிப்பூண்டி வரையும்
* வேளச்சேரியில் இருந்து பிற்பகல் 1.35 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில் அரக்கோணம் வரையும் தொடர்ந்து இயக்கப்படும்.
நேரத்தில் மாற்றம் இல்லை
* வேளச்சேரியில் இருந்து பிற்பகல் 1.55 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை வரையிலும், வேளச்சேரியில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரெயில் திருத்தணி வரையிலும் தொடர்ந்து இயக்கப்படும்.
மேற்கூறப்பட்ட மின்சார ரெயில் சேவைகள் அனைத்தும் பொதுமக்களின் வசதிக்காக ஒருங்கிணைக்கப்பட்டு தான் இயக்கப்படுகின்றன. அதேபோல், அந்த மார்க்கத்தில் செல்லும் ரெயில்களின் நேரத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.